Thursday, April 2, 2020

ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 288 பேர் கைது


நேற்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 71 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 8 ஆயிரத்து 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 2 ஆயிரத்து 149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com