Sunday, March 22, 2020

ஊரடங்குச் சட்டத்தினால் கொரோனா பீடிப்பு மட்டம் வீழ்ச்சி!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலிருந்து தற்போதைக்கு இந்நாட்டில் கொரோனா வைரசு தாக்கத்திற்குள்ளானவர்களின் நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 77 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இன்று கொரோனா நோயாளியாக ஒருவர் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com