Monday, March 30, 2020

எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டம்

தற்போதைய நிலமைக்கு மத்தியிலும் கூட பாலியல் தொடர்பான நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் மூலம் சிகிச்சை (கிளினிக்); பெறும் நபர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பாலியல் தொடர்பான நோய் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்தி;டத்தினால் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் அறிவிப்பு
தற்போதைய நிலமைக்கு மத்தியிலும் கூட பாலியல் தொடர்பான நோய் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் மூலம் சிகிச்சை (கிளினிக்); பெறும் நபர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொழும்பில் அமைந்துள்ள மத்திய சிகிச்சை (கிளினிக்); யின் மூலம் திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரையில் காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் மருந்துகளை விநிNhகிக்கும் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், தமக்கு பொருத்தமான சிகிச்சை(கிளினிக்);க்கு சமூகமளிப்பதற்கு முடியாத நபர்களுக்கு தமக்கு அருகில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு செல்ல முடியும் என்றும் தேசிய பாலியல் தொடர்பான நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ரசஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் அமைந்துள்ள தேசிய பாலியல் தொடர்பான நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சிகிச்சை (கிளினிக்); நிலையங்களின் தொலைபேசி இலக்கங்கள் தமது நிறுவனத்தின் இணையதளமான றறற.யனைளஉழவெழசழட.பழஎ.டம என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய பாலியல் தொடர்பான நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் (கிளினிக்); சிகிச்சைளை பெற்றுக்கொள்ளுவதற்காக கையடக்கத் தொலைபேசியில் அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியை பொலிஸ் நிலையத்திடம் காட்டி அதனை அவசரகால சட்ட அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று விசேட வைத்தியர் பாலியல் தொடர்பான நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ரசஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com