Tuesday, January 14, 2020

ஐரோப்பாவில் LTTE க்கான தடை நீளுகின்றது....!

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டுவதற்கு அவ்வமைப்பு தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய கவுன்சிலினால் 6 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புப் பட்டியலை மேம்படுத்தும்போது மீண்டும் ஒருமுறை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினைப் பயங்கரவாதப் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளது.

15 உறுப்பினர்கள் மற்றும் 21 அமைப்புக்கள் இவ்வாறு மேலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அமைப்புக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்துச் செயற்பாடுகளும் முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் முதலீடு மற்றும் பணச் சேகரிப்புக்கும் ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com