Thursday, January 2, 2020

பாராளுமன்றக் கூட்டத்தொடரின்போது படாடோபம் வேண்டவே வேண்டாம்!

பாராளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போது நாளை (3) இராணுவ மரியாதைகள் நடத்தக்கூடாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

பொதுவாக, அமர்வினை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் போது, ​​குதிரைப் படையுடன் வரும் ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை நடைபெறும்.

அதற்கேற்ப, இராணுவ மரியாதைக்காக பயிற்சி நடைபெறும். ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இம்மரியாதையை இரத்துச் செய்யுமாறு கோரியுள்ளார்.

குதிரைப்படை மூலம் தனது வருகை தருவதையும் ஜனாதிபதி இரத்துச்செய்துள்ளார். இந்த ஆண்டு அமர்வு எளிமையானதாக அமையவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com