Sunday, December 22, 2019

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனிகின்றாராம் டளஸ் அழகப்பெரும

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாததை இட்டு வெட்கமடைகிறேன் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கவலை வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை தேசிய மொழிகள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் இரண்டே மொழிகள்தான் அதிகளவு பேசப்படுகின்றன. அதில் சிங்கள மொழியை அதிகமாக பேசுகின்றோம். ஆனால் தமிழ் மொழியை நாங்கள் இதுவரை கற்றுக்கொள்ளாதிருப்பது வெட்கத்திற்குரிய விடயம்” என கல்வி அமைச்சர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com