Tuesday, December 3, 2019

தனது நாட்டு பெளத்த உரிமைகளைப் பாதுகாக்க இலங்கையுடன் கைகோக்கிறது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் சாத் மஃமூத் குரேசி, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷைவைச் சந்தித்தார்.

தனது நாட்டினதும் தனதும் வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார அபிவிருத்தி, வியாபாரம் மற்றும் பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்பு உதவி மற்றும் வலயத்திற்கான உதவி போன்ற துறைகளில் இரு நாடுகளினதும் தொடர்பை மென்மேலும் வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தானின் விருப்பத்தைத் தெரிவித்தார்.

'தற்போது இருநாடுகளுக்கும் இடையே அண்மித்த நண்பும் ஒருமைப்பாடும் இருக்கின்றது. உதவி ஒத்தாசைகளை விரிவுபடுத்தி அதனை மென்மேலும் வலுப்படுத்துவதே பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக உள்ளது' என வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டார்.

தங்கள் நாட்டிலுள்ள பெளத்த பாரம்பரியங்களை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாகவும் அமைச்சர் குரேசி குறிப்பிட்டார். ...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com