Monday, December 16, 2019

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார் விமல்!

சென்ற புதன்கிழமை ஒரு பெளர்ணமி தினத்தன்றுபோயா நாள் என்பதால், அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச ஜனாதிபதியிடம் மிக முக்கியமான கேள்வியொன்றைக் கேட்டுள்ளார்.

'' அரசாங்கம் எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பது பற்றிய பேச்சு பரவலாக அடிபடுகின்றது. அதற்கு எதிராக நாங்கள் பேசியவர்கள். ஆகவே, ஜனாதிபதி அவர்களே... இது தொடர்பில் உங்கள் உங்கள் முடிவு என்ன? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள்,

"முதலாவதாக, எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் நான் ஏற்க மாட்டேன் ... கூடுதலாக, ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் மறுஆய்வு செய்ய டாக்டர் லலித்ஸிரி குணவர்தன தலைமையில் ஒரு குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் ... அந்தக் குழுவின் நிபுணர் கருத்தையும் நாங்கள் ஆலோசிப்போம்." எனபதிலளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com