Sunday, December 29, 2019

கருணாவை கொலைசெய்யத் திட்டமிட்ட நால்வர் ஆயுதங்களுடன் கைது.

பிரபாகரனின் முன்னாள் வலதுகரமான கருணான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என சந்தேகிக்கப்படும் நால்வரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவர் முன்னாள் புலிகள் என்பதுடன் அவர்களிடமிருந்து ரி56 ரக ஆயுதம் ஒன்றும் பிற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் மலேசியாவிலிருக்கும் கும்பல் ஒன்றினால் இயக்கப்படுவது ஆரம்ப கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

திருமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மேற்படி நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் கையளிக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com