Saturday, December 28, 2019

ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பல்கலை அரசுடைமையாக்குவதற்கு பிரயத்தனம்!

மட்டக்களப்பு - காத்தான்குடியில் அமைந்துள்ள 'பெட்டிகலோ கெம்பஸ்' நிறுவனத்தை அரசுடைமையாக்குவதற்கு தற்போது நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரவாலாகப் பேசப்பட்டு வந்தது.

ஸவுதி அரசாங்கத்தின் 300 கோடி உதவியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதும் இந்நிறுவனம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட செயற்குழு, இந்த நிறுவனத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அதற்கேற்ப, அந்த நிறுவனம் வெகுவிரைவில் அரசுடைமையாக்கப்படும் எனத் தெரிய வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com