Monday, December 16, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்காக பட்ட கடன் 260 மில்லியனையும் எவ்வாறு செலுத்துவதென்று தலையைப் பீய்க்கிறார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர் ஆகிய எந்தவொரு பதவியையும் தான் எதிர்பார்ப்பதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து, தன்னை தொந்தரவு செய்துவருவதாகவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச மகாசங்கத்தினரிடம் தெரிவித்ததாகவும், ஐக்கிய பிக்குமார் முன்னணியின் செயலாளர் தினியாவல பாலிதா தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தில் இன்று (16) தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக தான் 260 மில்லியன் ரூபா கடன்பட்டிருப்பதாகவும், அதனைச் செலுத்துவது தொடர்பில் சிந்தித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச தன்னிடம் கூறியதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

பிளவுபட்டு பிரிந்து நிற்பதை விடவும், ஒற்றுமையாக செயற்பட்டு வெற்றிக்காக பங்களிப்புச் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்குவதாகவும் குறிப்பிட்ட பாலித்த தேரர், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவிடம் ரியுஷன் வகுப்புச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய பிக்குகள் முன்னணி சிறிக்கொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com