Monday, November 25, 2019

இனமுறுகலுக்கு வித்திடுவோரை கைது செய்து சிறையிலடைப்பீர்! பொலிஸ் தலைமையகம் விசேட உத்தரவு..

இனநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இனமுறுகலுக்கு வித்திடும் செயற்பாடுகளையும் செயற்பாட்டாளர்களையும் இனம்காணும் பிரகாரம் ரோந்து சேவைகளை அதிகரிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு இனம்காணப்படும் நபர்களை கைது செய்து விளக்கமறியலில் அடைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இனமுரண்பாடு தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தாமதமின்றி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலைத்தளங்களில் இனமுறுகலை தோற்றுவிக்கும் பதிவிடுவோர் தொடர்பாக சைபர் கிறைம் பிரிவினரை கவனம் செலுத்துமாறும் வேண்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com