Thursday, November 7, 2019

தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் என டுவிட்டர் செய்தி...! இரான்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெறும் எனவும், இதற்காக குழுவொன்று மும்முரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் டுவிட்டர் செய்தியொன்று தனக்கு வந்துள்ளதாக நிதி அமைச்சர் இரான் விக்கிரமத்ன நேற்று (06) தேர்தல் ஆணையகத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு டுவிட்டர் செய்தி வந்துள்ளதாகவும், இவ்வாறு டுவிட்டர் செய்தியைவெளியிட்டுள்ள நபரை உடனடியாக பாதுகாப்புச் சபைக்கு வரவழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இரான் விக்கிரமரத்ன முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தனது முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தேர்தல்கள் ஆணையகத்திற்குத் அனுப்பிவைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com