Tuesday, November 26, 2019

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் தடை. பேராசிரியரின் அதிரடி உத்தரவு

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் தின கொண்டாட்டங்களையோ அதனையொத்த எவ்வித நிகழ்வுகளையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவானது யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் கந்தசாமியினால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் பல்கலைக் கழகத்தின் சகல பீடாதிபதிகளுக்கும் மாணவர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. :

எதிர்வரும் 26ம் மற்றும 27ம் திகதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதையும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதனை சகல மாணவர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.



எவ்வாறாயினும் நேற்று நள்ளிரவில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக இடமொன்றில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com