Thursday, November 28, 2019

சாதாரண பயணிகள்போல் இந்தியா சென்றார் கோட்டா! எதிர்ப்பார்பாட்டம் நடத்திய வைகோ சிறையிலடைப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதியை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பிரகாரம் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இன்று இந்தியாநோக்கி ஆரம்பித்துள்ள கோத்தபாய ராஜபக்ச விஐபி (பிரமுகர்களுக்கான பாதை) களுக்கான பாதையை பயன்படுத்துவதற்கு பதிலாக சாதாரண பயணிகள் செல்லும் வரிசையில் சென்றுள்ளார்.

நாளை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி யை சந்தித்து பேச நிகழ்சிநிரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் இந்திய வருகையை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். அவர் டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இன்று காலை முதல் மறுமலர்த்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தபோது அங்கு விரைந்த பொலிஸார் வைகோ வை கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன..







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com