Friday, November 29, 2019

கோட்டா – அஜித் டோவால் சந்திப்பு!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்துள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்பு விகவாரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பாக அஜித் டோவால் ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கியதாக அறியமுடிகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு விடயங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா 50 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்யமுன்வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் பாதுகாப்பு தொடர்பான சில நவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்கவும் இந்திய உறுதியளித்துள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com