Saturday, November 30, 2019

எங்கள் நாட்டு ஆளும் வர்க்கத்தினருக்கு மக்கள் ஏழைகளாக மாறுவதில் நன்மையுள்ளது!

தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற செயற்பாடுகள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னரும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பதுளை - ஹாலிஎலப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் நாட்டுஆளும்வர்க்கத்தினருக்கு மக்கள் ஏழைகளாகும் அளவிற்கு இலாபம் மற்றும் இலகு எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டினுள் இனவாத வடு உள்ளவரை அதனை விற்பனை செய்வதற்கு இலகுவாக உள்ளது எனக் குறிப்பிட்ட வித்யாரத்ன, அது துரதிர்ஷ்டமே எனவும் குறிப்பிட்டார்.

என்றாலும் அவர்கள் சொல்வது என்னவென்று பொதுமக்களுக்கு விளங்குவதில்லை எனவும், எதிர்வரும் காவங்களிலேனும் இந்த உண்மை இந்த உண்மையை மக்கள் தெரிந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கம் 'நல்ல பிள்ளை' பாத்திரமேற்று செயற்படுகின்றது எனவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இந்த 'நல்ல பிள்ளை'த்தனம் இருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தொடர்பில் தான் வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதியினால் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவை தொடர்பில் தனது விமர்சனங்கள் மேலெழும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com