Wednesday, November 27, 2019

கிட்டுக்கு நடுக்கடலில் அடிவிழ பிரபாகரன் எவ்வாறு இந்தியாவின் காலில் வீழ்ந்தான் தெரியுமா? ஸ்ரான்லி ராஜன்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.

மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.

கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம். அது சபையில் சொல்லமுடியா விவகாரம்

போராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.

சக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார்,

எப்படி? மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.

பிரபாகரன் சென்னையில் இருந்தபொழுது கிட்டு ஈழத்தில் பெரும் ஹீரோவானான், பிரபாகரன் பெயர் மங்க தொடங்கிய காலத்தில்தான் அவன் கால் போய் டம்மியானான்

வழக்கமாக துரோகிகளை களை எடுக்கும் பிரபாகரன் கிட்டுவிஷயத்தில் மகா அமைதி, அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை, பிரபாகரனின் இன்னொரு மோசமான முகம் இது

(இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் "கந்தன் கருணை" படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம் )

அமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கிட்டுவுக்கு கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா? இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி.

அதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.

அதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்,

அதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்

இதனால்தான் ராஜிவ் உயிருக்கு ஆபத்தான இயக்கங்கள் பெயரில் விடுதலை புலிகளின் பெயர் நீக்கபட்டது, திருப்பெரும் புதூரில் கூட அவருக்கு பாதுகாப்புகொடுத்த அதிகாரிகள் கையிலிருந்த பட்டியலில் புலிகள் பெயர் இல்லை

ஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த "வீரம்" இது

இவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.

ராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, "நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்..." என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது

ஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது "நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்?"

கிட்டு சொன்னார் "இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்".

அதன் பின் என்ன செய்தார்? எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா

பின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு

இந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.

(கிட்டு வந்த கப்பலை இந்தியா அடையாளம் கண்டவிதம் சுவாரஸ்யமானது , புலிகளின் தகவலை இடைமறித்து மிக சரியாக அடித்து நொறுக்கினார்கள்..)

தங்கள் கோபத்தை மிக சரியாக வெளிபடுத்திவிட்டு அமைதி காத்தது இந்தியா, பிரபாகரனுக்கு அடுத்த குறி தான் என்பது புரிந்தது , மெதுவாக தன் அல்லக்கை ஜெகத் கஸ்பர் மூலம் அந்த அறிக்கையினை விட்டான்

"பாதர் கிட்டு என் நண்பன், இந்தியா அவனை கொன்றது ஆனால் நான் இந்தியாவினை பழிவாங்கவில்லை நான் திருந்திட்டன்" என அவன் சொன்னதாக சொல்லி திரிந்தார் பாதிரி

சரி பிரபாகரன் இந்தியாவினை எப்படி பழிவாங்குவான் பாதர் என திருப்பி கேட்கபட்ட கேள்விக்கு பாதிரியிடமும் பதில் இல்லை

இம்மாதிரி ஒருமாதிரி இறுமாப்பான நபர்தான் பிரபாகரன்.

கிட்டு ராஜிவ் பிரேமதாச என இருவரை நம்ப வைத்து கொன்ற படுபாவி.

இப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.

எத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்

இன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா? இவன் சாரம் தெரியுமா? என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.

(இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்

சந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)

கிட்டு இன்று இல்லை, ஆனால் இருந்திருந்தால் நமது சீமானிய குஞ்சுகள் எப்படி கத்தும் தெரியுமா?

கருணாநிதி மற்றும் சோனியாவின் சதிவேலையால் பரிதாபமாக கால் இழந்தார் வீரதிருமகன் கிட்டு.

1 comments :

Unknown November 27, 2019 at 6:42 PM  

உளறல் சிறப்பு!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com