Friday, November 29, 2019

லண்டனின் பதட்டம், பயங்கரவாத தாக்குதலா? பாலம் மூடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பிரபலமான லண்டன் பாலம் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொலிஸார் பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

பாலத்திற்கு அருகாமையில் ஒருவர் கத்தியினால் குத்தி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கப்பட்டார். சுமார் 5 நிமிடங்களில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மக்களை விலத்தி சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவனை கைது செய்துள்ளனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் எம்ஐ 5 மற்றும் 6 னர் தேடுதல்களை நடாத்திவருகின்றனர்.

இச்சம்பவத்தில் 5 வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கு பிரித்தானிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அரசியல் பிரபலங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்கின்றது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com