Sunday, November 24, 2019

சிஐடி யின் பிரதான பரிசோதகர் நிஸாந்த த சில்வா நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்..

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பரிசோதகர் நிஸாந்த த சில்வா இன்று பிற்பகல் 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியமுடிகின்றது.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிஸாந்த த சில்வா தனது குடும்பத்தினருடன் சுவிட்ர்லாந்து நோக்கிய பயணமாகியுள்ளார். சுவிட்சலாந்துக்கு சொந்தமான சுவிஸ் விமானச் சேவையின் WK - 0065 என்ற விமானத்தில் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

அவர் நாட்டில் இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவின்பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் பின்னர் குறித்த இடமாற்றத்தை சுயாதீன பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு ரத்துச் செய்திருந்தமையும் யாவரும் அறிந்தவிடயம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com