Sunday, October 13, 2019

கோத்தாவுடன் கைகோக்கும் தொண்டா!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்கள் இன்று முற்பகல் ஒன்றுகூடிய கூட்டத்தின்போது இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அக்கட்சி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com