Saturday, October 12, 2019

சிங்களக் குடியேற்றம் என நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்குலக தமிழரே கேளீர். பீமன்.

இலங்கையின் வடகிழக்கு தமிழரின் தாயகமாம் அங்கே சிங்களவன் குடியேற முடியாதாம்! இதுதான் இலங்கை தமிழ் அரசியல்விபச்சாரிகளதும் மேற்குலக தமிழரதும் கோஷம். சிங்களவன் குடியேற்றத்தை மேற்கொண்டு குடிப்பரம்பலை உருவாக்கி பாராளுமன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதுதான் நோக்கமாம். இதுவரை பாராளுமன்றுக்கு சென்ற தமிழன் என்ன மயிரை தமிழ் மக்களுக்கு கொண்டுவந்து கொடுத்தவன் என்ற கேள்வியை கேட்டு நேரத்தை வீண்விரயம் செய்யாது விடயத்துக்கு வருகின்றேன்.

வடகிழக்கில் சிங்களவன் குடியேறுகின்றான் தமிழரின் விகிதாசாரம் குறைகின்றது என மேற்குலகத்திற்கு சென்றிருந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழனுக்கு இன்றைய நாளில் ஒரு செயல்வீரனை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தீவகத்தின் குக்கிராம் ஒன்றில் பிறந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது முழுநாளையும் அர்பணித்தவர் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட். அவுஸ்திரேலியா, வட ஆபிரிக்கா , பிரித்தானியா என்றெல்லாம் சுகபோக வாழ்கை கிடைத்திருந்தும் அங்கு தான் உழைத்து சேமித்த பணத்தை கொண்டு இலங்கை வந்து டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். (டேவிட் ஐயா கட்டிய காந்தியம் என்ற கூட்டில் புளொட் முட்டையிட்ட கதை வேறு) வடகிழக்கில் குடியேற்றத்திற்கு எதிராக இரத்தம் சிந்தாத யுத்தம் ஒன்றை புரிந்தார். காந்தியத்தினூடாக மலையக பகுதிகளிலிருந்த தமிழ் மக்களை முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லை பிரதேசங்களில் குடியேற்றினார். டேவிட் அவர்களால் அந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காதிருந்திருந்தால் இன்று வன்னியின் சனத்தொகை எவ்வாறிருந்திருக்கும் என்பதை அவரது நினைவு நாளான இன்று கற்பனை செய்யும்போது இச்சமூகத்தின்மீது பாரியவெறுப்பு ஏற்படுகின்றது. தீர்க்கதரிசனத்துடன் வன்னியின் சனத்தொகையை பெருக்க அரும்பெரும் பணியாற்றிய அந்த மகனை மறந்த எமது சமூகம் வன்னியின் சனத்தொகையை கொடிய யுத்தத்தின் ஊடாக அழித்தொழித்த ஒரு மோடனை தீர்க்கதரிசி என வாழ்த்தி வணங்குகின்றது. அவனது இறப்பைக்கூட ஏற்க மறுக்கின்றது.

எனவே இறுதியாக டேவிட் ஐயாவின் நினைவு நாளான இன்று „சிங்களக்குடியேற்றம் தமிழ் மக்களின் குடிப்பரம்பல்" என்றெல்லாம் புலம்பும் மேற்குலக தமிழனுக்கு ஒர் சவால் விடுக்கின்றேன். வடக்கிலிருந்து வெளியேறி சுமார் 15 லட்சம் தமிழர்கள் மேற்குலகில் வாழ்ந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. முடிந்தால் மலைநாட்டிலிருந்து டேவிட் அவர்களின் பாணியில் 1 லட்சம் தமிழ் மக்களை வடகிழக்கில் குடியேற்றிக்காட்டுங்கள்..

டேவிட் ஐயாவின் வாழ்கைவரலாறு மற்றும் அவர் எவ்வாறு காந்தியத்தை கொண்டு இயக்கினார் என்பது தொடர்பாக அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தி அங்குள்ள வீடியோக்களில் அவர் விளக்குவதை கேட்கலாம்.

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று. பீமன்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com