Friday, October 18, 2019

ஒரு வருடத்திற்கு கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்களுடன் யப்பான் ஓப்பந்தம் கைச்சாத்து

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்படும் மனிதநேய நிறுவனங்களுடன் யப்பான் அரசு மேலும் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

முகமாலை பகுதியில் யுத்த காலங்களின் போது புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளில் ஸாப் நிறுவனமும், ஹலோரெஸ்ட் நிறுவனமும் இணைந்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுடனுமே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கத்தின் கிராஸ்ரூட்ஸ் மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான கிராண்ட் உதவி (GRANT ASSISTANCE FOR GRASSROOTS HUMAN SECURITY PROJECTS) திட்டததின்னுடாக கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக ஒரு வருடத்துகான சுமார் 105 மில்லியன் ரூபா நிதி வழங்க ஒப்பந்ததில் கைச்சாத்திடப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் ஸாப் நிறுவனத்தினதும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தினதும் முகாமையாளர்கள் ஒப்பந்தத்தில் இன்று (18.10.2019) கையெழுத்திட்டு ஜப்பானிய தூதுவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள்.

இதன்பின்னர் கண்ணிவெடி அகற்றப்படும் இடங்களுக்கு நேரில் சென்று ஜப்பானிய தூதுவர் பார்வையிட்ட மை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கைச்சாத்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் நிகழ்வில் யாழ் மாவட்டத்தின் படைப்பிரிவின் கட்டளைத் தளபதிகள் ஸாப் நிறுவனத்தினதும் ஹலோரெஸ்ட் நிறுவனத்தினதும் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com