Tuesday, October 15, 2019

சுமந்திரனின் காது கிழியக் கொடுக்கிறார்கள் மகிந்தா - கோத்தா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் கொழும்பில் நடாத்திய பேச்சுவார்த்தை எவ்விதப் பலனுமற்றுப்போனது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கு பிரச்சினை விடயத்தில் கோத்தபாயவின் நிலைப்பாடு என்னவென்றும், இதற்கான தீர்வை வழங்குகின்ற தீர்வு என்ன என்றும் கேட்டபோது, இந்தப் பேச்சுவார்த்தையின்போது கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறுக்கிட்டு 'வடக்கு கிழக்கு மக்களுக்குள்ள பிரச்சினையை விடவும் பாரிய பிரச்சினை தெற்கில் உள்ள மக்களுக்கு இருக்கிறது' எனக் குறிப்பிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வடக்கு கிழக்கு மக்களும் தெற்கிலுள்ள மக்களும் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் ஒன்று போலவே இருக்கின்றன எனவும் அப்பேச்சுவார்த்தையின்போது கோத்தபாய ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் இருவரும் தங்களது புதிய அரசாங்கத்தில் வடக்கு கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருவதற்கு விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர், சுமந்திரன் தான் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் கூறியபோது, அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com