Sunday, October 6, 2019

மொட்டுக்காக ஒத்துழைப்பு வழங்க முன்வருகிறார் ஜனாதிபதி மைத்திரி!

பொதுத்தேர்தலில் ஸ்ரீசுகவும் ஸ்ரீபொபெ இரண்டும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் எதிர்வரும் 09 ஆம் திகதி (புதன்கிழமை) இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைநடாத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

அதற்கேற்ப, ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒத்துழைப்பு கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதன்பின்னர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து கதிரைச் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இருதரப்பும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற பெயரில் புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com