Monday, October 7, 2019

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறிதரனின் சமாதான நீதவான் கைது

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவானும், சிறிதரன் எம்பியின் பெரியகுளம் வட்டார கிளை உறுப்பினருமான தீபன் உட்பட இருவரை கிளிநொச்சி பொலீஸார் கைது செய்யதுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு பேரூந்தில் வந்த சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்து சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சமாதான நீதவான் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் பிரிதொரு நபரும் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த சிறுமி கதறி கூக்குரல் எழுப்பிய போது இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரை தாக்கியுள்ளான்.

பின்னர் கிளிநொச்சி பொலீஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொலீஸார் இன்றைய தினம் குறித்த சமாதான நீதவான் உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர் இருவரையும் நாளைய தினம்(செவ்வாய் கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தவுள்ளனர்.

குறித்த சமாதான நீதவான் அரசியல் கட்சி ஒன்றின் வட்டாரக் கிளையின் உறுப்பினர் என்பதோடு, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் சமாதான நீதவான் பதவிக்கும் சிபார்சு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com