Tuesday, October 1, 2019

இரண்டாவது விருப்பு வாக்கினை அநுரவுக்கு வழங்குமாறு கோருகிறார் ஜயம்பதி!

பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன, தான் தேசிய அமைப்பாளராகப் பணிபுரியும் ஐக்கிய இடதுசாரி முன்னணியிலிருந்து விலகி, அநுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

ஐக்கிய இடதுசாரி முன்னணி என்றழைக்கப்படும் மாற்றுக் குழுவின் மத்திய செயற்குழு ஒன்றுகூடி, அந்த முடிவினை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கேற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுகின்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவரின் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயற்படுவது பற்றி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது விருப்பு வாக்கினை அநுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்குமாறு பொதுமக்களைத் தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தபாயவுக்கு வழங்காமல் பலம்பொருந்தி வேட்பாளரான அநுரவுக்கு வழங்குவதற்கு ஆவன செய்யுமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com