Thursday, October 3, 2019

பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு தனது ஆட்களை வைத்து அடிக்கப்போவதாக மிரட்டுகின்றான் சிறிதரன்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை தனது ஆட்களை கொண்டு அடிக்கப் போவதாக பூநகரி பிரதேச செயலாளரிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பூநகரி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் தனது முகநூலில் ஊடகங்களில் வரும் செய்திகளை பதிவேற்றி வருகின்றார். குறிப்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது அவர் அதிக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். அதிலும் பாராளுமன்ற உறுப்பினனர் சி. சிறிதரன் அவர்களின் முறைகேடான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் தனது முகநூலில் எழுதி வருகின்றார்கள். இதனால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தான் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்றும், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடப்போவதாகவும், அத்தோடு தனது பொடியல் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களை இவரை அடிப்பார்கள் என்றும் நேற்று(02) பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ் எச்சரிக்கை தொடர்பில் பூநகரி பிரதேச செயகலத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் மேலதிகாரிகளிடமும் கோரியுள்ளனர்.

சிறிதரனின் மேற்படி மிரட்டலுக்கு பதிலளித்த பிரதேச செயலாளர், அரச ஊழியர்களுக்கு கடமை நேரம் தவிர்ந்த நேரங்களில் அரசியலில் ஈடுபடுவதற்கான பூரண உரிமை உண்டு என்றும் அவர்களது அவ்வுரிமையை எவரும் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளதுடன், அவர் கடமையில் இருக்கும்போது அவரது பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறுவேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிதரனை எச்சரித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com