Friday, October 4, 2019

இன்று நள்ளிரவுடன் "கேஸ்" விலை சரிகிறது....

சமையல் எரிவாயு கொல்கலன் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு (04) டன் குறைப்பது கைத்தொழில் மற்று வணிக அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கேற்ப, 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலையை ரூபா 240 இனால் குறைக்கவுள்ளதுடன், 5 கிலோ கிராம் எரிவாயுவின் விலையை ரூபா 95 இனாலும், 2.3 எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை ரூபா 30 இனாலும் குறைப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விலைத் திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1493.

5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூபா 598 ஆவதுடன், 2.3 சிலிண்டரின் புதிய விலை 289 ரூபாவாகும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த விலை மாற்றம் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் எரிவாயுவின் விலையைக் கூட்டி விற்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இதற்குப் பொறுப்பான அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் நுகர்வோர் தொடர்பான அதிகார சபைக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com