Wednesday, October 2, 2019

பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்படும் ஊழியர்கள் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக கணிக்கப்படும் - ரயில்வே பொது முகாமையாளர்

சுகயீன விடுமுறையென அறிவித்து சேவைக்கு சமூகமளிக்காத ரயில் சாரதிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளதாக கணிக்கப்படும் என, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 07 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றன.

பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையிலேயே ரயில்வே திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com