Friday, October 11, 2019

ஸ்ரீசுகவின் தலைமைப்பதவி பேராசிரியரிடம் சென்றதால் கட்சியினுள்ளே உட்பூசல்....

பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சியினுள்ளே எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

அக்கட்சியின் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தத் தேர்வு தொடர்பில் தங்களது பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

கட்சியினுள்ளே பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கும்போது, ரோஹண லக்ஷமன் பியதாஸவுக்குத் தலைமைப் பதவி வழங்கப்பட்டிருக்கக் கூடாது என்பது பலரதும் கருத்தாக உள்ளதாகத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com