Thursday, October 3, 2019

சிறிதரனுக்காக சுற்றுநிரூபத்தை மீறும் பூநகரி பிரதேச செயலர். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட செயலர்?

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜெயபுரம் கிராம அலுவலர் தேவன்குள பகுதியில் உள்ள வயல்காணியானது 1983ம் ஆண்டு ஜூலை க்கலவரத்தில் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து ஜெயபுரத்தில் குடியேறிய தலா ஒரு ஏக்கர் வீதம் 100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

வனவள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த குறித்த காணியில் பயனாளிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாதநிலை தோன்றியிருந்தது. இவ்விடயம் தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைய குறித்த காணியை விடுவிப்பதற்கான களப்பரிசோதனை நாளை வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் தலைமையில இடம் பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலுக்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனால் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது.

தேர்தல்கள் ஆணையாளரின் 2017.12.04 ம் திகதிய விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூன்றாம் பந்தி கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுகின்றது.

3. வைபவங்கள், நடமாடும் சேவைகள் மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள் :

(i) வைபவங்கள் :


தேர்தல் காலப்பகுதிக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி நடாத்தப்படுகின்ற பல்வேறு விதத்திலான அடிக்கல் நாட்டுதல்கள், திறந்து வைப்புக்கள், மக்கள் உரிமைக் கையளிப்புக்கள் போன்ற வைபவங்களை அரசியல்வாதிகளின் பங்களிப்போடு மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் தேர்தலோடு தொடர்புடைய பல்வேறு கருததுக்கள் அவர்களினால் வெளிப்படுத்தப்படுவதனாலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் விழாக் கோலத்தோடு, ;அவை நடாத்தப்படுவதூடாகவும் ஏதேனும் ஒரு கட்சி/ குழு அல்லது வேட்பாளர் ஊக்குவிப்போ அல்லது கட்சிக்கு/ குழுவுக்குஃ வேட்பாளருக்கோ பாதிப்பு நிகழக்கூடுமாதலால், இத்தேர்தல் காலப்பகுதிக்குள் அத்தகைய வைபவஙகள் மற்றும் பணிகளை ஒழுங்கமைப்பதையும் நடாத்துவதையும் தவிர்த்துகொள்ளல் வேண்டும் . தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முன்னர் நாள் குறிக்கப்பட்ட அத்தகைய வைபவங்களை இரத்துச் செய்யவோ ஒத்திவைக்கவோ முடியாதவிடத்து, அத்தகைய வைபவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிக்கையிட்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். தேர்தல் ஏதேனுமொரு விதத்தில் அரசநிதியைச செலவிட்டு இத்தகைய வைபவங்கள் நடாத்தப்படின் அத்தகைய சந்தர்ப்பமொன்றில் கட்சிகள் / குழுக்கள் / வேட்பாளர்கள் ஊக்குவிப்பு அல்லது பாதிப்பை ஏற்படுத்துமாயின், அது தொடர்பாக வைபவத்தை ஒழுஙகமைத்த அலுவலர்கள் வகைகூறுதல் வேண்டும் . அத்தோடு, தேர்தல் காலப்பகுதிக்குள் நடாத்தப்படுகின்ற இத்தகைய வைபவங்கள் தொடர்பாக அவதானித்து அறிக்கைகளைப் பேணுவதற்காக உரிய மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களை முன்கூட்டியே அறிவ{ட்ட இப்பணிகளை ஒழுங்கமைக்கின்ற அலுவலர்கள் நடவடிககையெடுத்தல் வேண்டும் . இத்தகைய வைபவமொன்றில் கட்சிஃ குழுஃ வேட்பாளர் ஊக் குவிப்புக் காகவோ, ;பாதிபபுற செய்வதற் காகவோ எவ்விதத்திலான கூற்றுக்களையும் வெளியிடல் , செயற்பாடுகளை மேற்கொள்ளல் ,;கொடிகள்/ பதாகைகள்/ சுவரொட்டிகள்ஃ பிரசுரங்கள்/ அறிவித்தல்களைக் காட்சிப்படுத்தல் அல்லதுபகிர்ந்தளித்தல் முற்றிலும் தடையென்பதோடு, அத்தகைய பணிகளை தவிர்ப்பது உரிய வைபவங்களை ஒழுங்கமைக்கின்ற அல்லது நிதியளிப்பு மேற்கொள்கின்ற அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் கடமையாகும்.

நாளை இடம்பெறவுள்ள நிகழ்வில் சிறிதரன் கலந்து கொள்வது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி சுற்று நிருபத்தை மீறும் செயற்பாடாகும். எனவே நாளை குறித்த நிகழ்வில் சிறிதரன் கலந்து கொண்டால் சுற்று நிரூபத்தை மீறியமைக்காக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புவதுடன் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தேர்தல்கள் ஆணையகத்திற்கு முறையிட மக்கள் தயாராகி வருகின்றார்கள் எனபதையும் தெரியப்படுத்துகின்றது.

அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக செயற்படும் அரச ஊழியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும்வரை இந்நாட்டில் ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியாது என்பது யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com