Friday, October 11, 2019

நான் ஜனாதிபதியானால் பீல்ட் மார்ஷல் பதவி சரத் பொன்சேக்காவுக்கே! - சஜித்

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பாதுகாப்பு அமைச்சினை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும்பாதுகாப்பை கருத்திற் கொண்டு அந்த பொறுப்புக்களை நான் சரத் பொன்சேகாவிடம் கையளிக்கவுள்ளேன் எனவும் தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com