Thursday, October 3, 2019

நிதி மோசடியில் ஈடுப்பட்ட சிறிதரனின் சகா கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுதலை

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசு கட்சியின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான பசுபதிபிள்ளையின் பெறாமகனும் சிறிதரனின் சகாவுமான கிளிநொச்சி சந்தை காப்பாளர் நந்தன் என்பவர் இரண்டு இலட்சத்து 28 ரூபா சந்தை வியாபாரிகளைின் பணத்தை மோசடி செய்த குற்றச் சாட்டியில் கிளிநொச்சி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த ஊழியர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் குறித்த மோசடியை மூடி மறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுப்பட்டுள்ளார் என பிரதேச சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த மோசடியில் ஈடுப்பட்ட பணியாளருக்கு எதிராக கரைச்சி பிரதேச சபையின் செயலாளரினால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அப் பணியாளர் கைது செய்யப்பட்டு பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுப்பட்ட பணியாளர் அரசியவாதி ஒருவரின் நெருங்கிய உறவினராவார். எனவும் கரைச்சி பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் குறித்த பணியாளர் சந்தை வியாபாரிகளிடம் பெற்ற நில வாடகை, விற்பனை வரி, உள்ளிட்ட நிதியினையே மோசடி செய்துள்ளார். இரண்டு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிதி மோசடி தொடர்பாக கரைச்சி பிரதேச சபை நிர்வாக ரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு, பொலீஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com