Thursday, October 10, 2019

மாயை என்ற புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது - அநுர குமார திசாநாயக்க

மாயை என்ற புதியதொரு அரசியல் கலாசாரம் அரசியலில் ஒரு புதிய பிரிவாக மாறிபோயுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற பேராசிரியர் காலோ பொன்சேக்காவின் நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வை, ஶ்ரீ லங்கா பகுதித்தறிவு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பூசாரி ஒருவரின் மூலம் தெய்வத்திடம் முறையிடுவார்கள் எனவும் அவ்வாறு பூசாரியின் மூலம் தெயவத்திற்கு முறையிடபடுவதாக மக்கள் நம்புவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி மக்கள் தமது குறைப்பாடுகளை பூசாரிக்கு சொல்வதாகவும் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை மக்களிடம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், ஆனால் தேவேந்திர ஆலயத்தின் பிரதான பூசாரிக்கு மக்கள் பக்கத்திற்கு வர முடியாதளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு பூசாரிக்கு தமக்குரிய ஆலயத்திற்கு செல்ல முடியாவிட்டால் அவர் எங்கு செல்வார் எனவும் அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார்.

எனவே, பல விடயங்கள் இவ்வாறு மாயையாக மாற்றமடைந்து பிரதான அரசியல் செயற்பாடுகளில் ஒரு பிரிவாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com