Friday, October 4, 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடி ரூபா தேவை - மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட வேண்டியுள்ளதாக இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இன்று (04) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதோடு, அதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை, ஒக்டோபர் 07 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினம் (04) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இம்முறை ஜனாதிபதி தேர்தல் 2018ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலுக்கேற்ப நடத்தப்படவுள்ளதோடு, ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் (15,992,096) இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.​

ஜனாதிபதித் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என இது வரை 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

13 ஆயிரத்திற்குக் குறையாத வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூபா 450 கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவானோர் கட்டுப்பணம் செலுத்திய சந்தர்ப்பம் இதுவென, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com