Friday, October 25, 2019

தேர்தல் மேடைகளில் காட்சிதரப்போகிறார் மைத்திரி!

தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 28 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாட்டுக்கு வந்தவுடன், ஜனாதிபதி குறித்ததொரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து அரசியல் களத்தில் நுழைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஜனாதிபதி சுதந்திரமாக இருப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தபோதும் ஆனால் ஜனாதிபதி தனது முடிவை மாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்த ஏற்கனவே 25000 பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ.ல.சு.க. அண்மையில் பல ஊடக சந்திப்புகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com