Tuesday, October 15, 2019

இன்னும் 20 கட்சிகள் கோத்தாவுடன் கைகோக்கின்றன....!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இன்னும் சிறுகட்சிகள் 20 கூட்டுச் சேர்ந்து ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் மகிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

இன்று (15) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

எல்பிட்டிய தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 5000 அதிகமான வாக்குகளை - அதாவது, நூற்றுக்கு 13 சதவீதம் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தத எனவும் அமரவீர அங்கு குறிப்பிட்டார்.

அதன்மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக மிகவும் பாடுபடக்கூடியவர்கள் நாடு முழுவதும் உள்ளனர் என்பது தெளிவாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்காகத் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சாதாரண குடிமக்களை விடக் கூடுதலான வாக்குகளைப் பெறுவார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றம் பொதுஜன பெரமுன இடையே வாக்கு வீதம் நூற்றுக்க 69 வீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்வரும் தேர்தலில் மிகக் கூடுதலான வாக்குகைளப் பெற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

தொண்டமானின் கட்சியும் ஒன்று சேர்ந்ததன் காரணமாக இன்னும் ஓர் இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் முன்னணிக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடும் அமரவீர, எதிர்வரும் நாட்களில் இன்னும் 20 கட்சிகளுக்கும் மேலாக ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்புடன் கைகோத்து கோத்தாவின் வெற்றியில் பங்குகொள்வார்கள் எனவும், மக்கள் சுதந்திர அமைப்போடு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒத்துழைப்பு நல்குவதற்கு முடியுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com