Sunday, October 13, 2019

பதவிக்காலம் முடிவதற்குள் நண்பனுக்கு 100 ஏக்கர் காணி வழங்குமாறு ஒற்றைக்காலில் நிற்கும் சுரேன் ராகவன்.

பூநகரி பிரதேச செயலக பிரதேத்திற்குட்பட்ட கோதாரிமுனை பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு 100 ஏக்கர் காணியினை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தனது அதிகாரத்தை எல்லை கடந்து பயன்படுத்தியுள்ளதாக பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அவுஸ்திரேலிய பிரஜையான வாசுதேவன் என்பவருக்கு உல்லாச விடுதி ஒன்றை அமைப்பதற்காகவே இப்பாரிய நிலத்தொகை வழங்கப்படவுள்ளது. இப்பிரதேசத்தில் உல்லாச விடுதியொன்று அமைவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் கருத்தில் எடுப்பதற்குகூட கால அவகாசம் வழங்காது காணியினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலருக்கு வட மாகாண ஆளுநர் அழுத்தம் பிரயோகித்ததாக தெரியவருகின்றது. தொலைபேசியில் பலதடவைகள் பிரதேச செயலாளரை அழைத்து திட்டித்தீர்த்ததாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இங்கு மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் யாதெனில் , உல்லாச பிரயாணத்துறை மேம்பாட்டுக்கு அரசு அல்லது இலங்கை இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சிரழிக்க சிங்களம் கங்கணம்கட்டி நிற்கின்றது என கோஷமிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்விடயத்தில் கள்ள மௌனம் காத்துவருகின்றான். தமிழர் பிரதேசத்தில் உல்லாசப்பிரயாணம் என்பது தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பது என கோஷமிட்ட பா.உ உறுப்பினர், அவுஸ்திரேலிய பிரஜைக்கு அதே காரணத்துக்காக காணி வழங்கப்படும்போது அடக்கி வாசிக்கின்றார் என்றால் அதற்காக அவுஸ்திரேலிய டொலர்களில் பெட்டிகளை பெற்றுக்கொண்டாரா என்ற கேள்வியை இலங்கைநெற் எழுப்புகின்றது.

அத்துடன் சிலகாலங்களுக்கு முன்னர் அதே பிரதேசத்தில் வாழுகின்ற இளைஞன் ஒருவன் நன்நீர் மீன்வளர்ப்பிற்காக 3 ஏக்கர் காணியினை கோரியிருந்தபோது ஒரு நபருக்கு 3 ஏக்கர் காணிகளை வழங்க முடியாது என்றும் அவ்வாறு ஒவ்வொருவருக்கும் 3 ஏக்கர் கொடுத்தால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் காணித்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் போர்கொடி தூக்கியிருந்த சிறிதரனிடம் அவுஸ்திரேலிய நபருக்கு 100 ஏக்கர் வழங்கும்போது எதிர்காலத்தில் காணித்தட்டுப்பாடு நிலவாதா என்ற கேள்வியையும் இலங்கைநெற் கேட்கின்றது.

சுரேன் ராகவன் இன்னும் ஒரிரு மாதத்தில் பதவியிலிருந்து தூக்கி எறியப்படலாம் அல்லது தொடர்ந்தும் பதவியில் இருக்கலாம். ஆனால் அப்பதவியினை துஷ்பிரயோகம் செய்தால் அதற்கான தண்டனை பெறவேண்டிவரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்ததாகும்.

புலம்பெயர் தேசத்திலிருந்து இலங்கை வருகின்ற அத்தனை புறம்போக்குகளும் நாட்டின் வளத்தை சுரண்டி தமது வளத்தை பெருக்கவே முயற்சி செய்கின்றனர். முதலீடு என்ற முகமூடியுடன் காணிகளை பெற்றுக்கொள்ளும் இவர்கள் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளை அமைத்து மக்களுக்கான தொழில்வாய்ப்பை பெருக்கி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்கு பதிலாக அங்கே உல்லாச விடுதிகள், மதுமாண நிலையங்கள், விபச்சார விடுதிகள், சூதுநிலையங்கள் என்பவற்றை அமைத்து மக்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் சீரழித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே புலம்பெயர் தேசத்திலிருந்து முதலீடு என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கொடுத்து காணி அபகரிப்பில் ஈடுபட முனையும் நபர்கள் தொடர்பில் அவதானம் தேவைப்படுகின்றது. அவர்கள் காணியினை கோரும்போது எந்த நோக்கத்திற்காக காணியினை கோருகின்றார்கள் என்பது தெளிவாக எழுத்தில் பெறப்பட்டு அந்த நோக்கத்திலிருந்து அவர்கள் விலகிச் செல்ல முற்பட்டால் வழங்கப்பட்ட காணிகளை உடனடியாக மீளப்பெறுவதற்கான பொறிமுறை அவசியமாகின்றது.

காரணம் இவர்கள் யாவரும் காணியினை பெற்றுக்கொள்ளும்போது சுமார் 500 பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்கவுள்ளேன் என்றே குறிப்பிடுகின்றனர். ஆனால் இதுவரை அரச காணியினை பெற்றுக்கொண்டு 100 பேருக்கு தொழில்வழங்கியவர்கள் எவரும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com