Friday, September 27, 2019

சஜித்துக்கு இலங்கைப் பொருளாதாரம் பற்றிய எந்தவொரு நோக்கும் இல்லை... 'தொவில்'தான் ஆட வேண்டும்!மகிந்த

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு பொருளாதாரம் பற்றியோ வடக்கு கிழக்கு பிரச்சினைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை என எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நேற்று (26) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் நடாத்தப்பட்ட சம்மேளனமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"இப்போது சஜித் பிரேமதாசதான் 'தொவில்'ஆட வேண்டும். இவ்வளவு காலமும் வீடுகள் பற்றித்தான் பேசினாரே தவிர, நாட்டின் பொருளாதரம் பற்றியோ வடக்கு - கிழக்குப் பிரச்சினைகள் பற்றியோ இதுவரை ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அவருக்கு எந்தவொரு அக்கறையும் இல்லை. அவர் அதிக காலம் யால வனாந்தரத்தில்தான் காலம் கழித்தார்.

சென்ற முறை அன்னத்தில் போட்டியிட்டு நடந்தது என்னவென்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இம்முறை அன்னத்திற்குக் கொடுத்தாலும் அதே கதிதான். நாட்டைப் பாதுகாப்தற்கே நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com