Monday, September 2, 2019

கோத்தா ஜனாதிபதியானால் முழு நாடும் குட்டிச்சுவராகுகுமாம்! - முஜீபுர் ரஹ்மான்

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டால், நாடு பாதுகாப்பற்றுப் போகும் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ இருந்தபோது, இந்நாட்டின் ஊடகச் சுதந்திரம், குடிமக்களின் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகவே இருந்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கால கட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவர் ஜனாதிபதியானால் இந்நாட்டின் நிலை என்னவாகும் என பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு - மோதரவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் இரண்டாக பிளவு பட்டிருந்த நாட்டினை பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி இணைத்து வைத்தவர் என்ற நன்றியுணர்வுடன் இந்நாட்டின் மக்கள் உள்ளனர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபிர் ரஹ்மான் மறந்துவிட்டாரா என்று கேள்வி இங்கு எழுந்து நிற்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com