Tuesday, September 24, 2019

விஜயகலாவை அம்மணமாக்கினார் டக்கிளஸ் தேவானந்தா!

குற்றவாளி ஒருவரை காப்பாற்றுவதற்காக இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டுள்ளதாக விஜயகலாவின் நீதிக்கு முரணான செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா.

இன்று தனது கட்சிக்காரியாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் பருத்துறை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றின் குற்றவாளி ஒருவரை அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு விஜயகலா நீதி அமைச்சர் மற்றும் பிற திணைக்களங்களுக்கு விஜயகலா எழுதிய கடிதங்களை அம்பலப்படுத்திய டக்ளஸ் தேவானந்த நல்லாட்சியிலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் அதே அரசின் ராஜாங்க அமைச்சரால் ஏற்பட்டுள்ளது எனக்குற்றஞ் சுமத்தினார்.

பாரிய குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த நடராஜா சேதுறூபன் என்ற ஊத்தைச் சேதுவை குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக விஜகலா இவ்வாறு நீதிக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் விஜகலா வித்தியா என்ற யுவதி கற்பழித்து படுகொலை செய்யப்பட்டபோதும் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்று நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

விஜயகால மகேஸ்வரன் நீதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடித்தில் நடராஜா சேதுறூபன் என்பவன் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு உதவியதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கு கைமாறாக அவனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் பொருட்டு வழக்கை வாபஸ் பெறுமாறு கோரியுள்ளார்.

வெளிநாட்டு பிரஜை ஒருவர் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாது என்ற சட்டத்தை மீறி தேர்தலில் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சேதுறூபன் பின்னர் மோட்டார் வாகன குற்றச்சாட்டுகள் மாத்திரம் சுமத்தப்பட்டு அக்குற்றத்திற்கான தண்டப்பணத்துடன் விடுதலையானார். ஆனால் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை விஜகலாவின் அழுத்தம் காரணமாகவே என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இவ்விடயம் அம்பலத்திற்கு வந்ததை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நீதியின்மேல் அக்கறையுள்ள பல தரப்புக்கள் தெரிவிப்பதுடன் மீள்விசாரணைக்கு உத்தரவிடப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நீதிமன்றைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினான் என்றும் நீதிபதிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தினான் என்றும் ஊத்தை சேது மீது பருத்திதுறை நீதிமன்றில் வட மாகாண சட்டத்தரணிகள் சகங்கத்தினால் வழக்கொன்று தொடர்ப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவன் தலைமறைவாகியுள்ளான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விஜயகலா நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இங்கே இணைக்கப்படுகின்றது.




டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டின் ஒரு தொகுதி.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com