Friday, September 20, 2019

றிசார்ட் பதுயுத்தீனின் கைக்கூலியான வவுனியா பிரதேச செயலரின் காணி மோசடி அதாரங்கள் கசிந்தது!

அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காணி நிர்வாக அதிகாராங்கள் பிரதேச செயலர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பிரதேச செயலர்களால் பெரிதும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதுடன் இக்காணிகள் தமது முதிசச்சொத்து என்ற கணிப்பிலும் அவர்கள் செயலாற்றி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் வவுனியாவின் யு9 வீதியை அண்டிய பகுதியில் காணப்படும் பெறுமதிக்க காணிகள் பல வவுனியா பிரதேச செயலாளர் உறவினர்களுக்கு சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் மாறாக வழங்கியிருந்தமை பல ஆதாரங்கள் மூலம் முன்வைக்கப்பட்டு இருந்தது.

றிசார்ட் பதுயுதீனின் கைக்கூலியான குறித்த பிரதேச செயலாளரின் மேற்படி செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரச அதிபர் தவறியிருந்தார். இதற்கான காரணம் குறித்த செயலாளருக்கு றிசார்ட் பதுயுதீனுடனுள்ள தொடர்பு காரணமான அச்சமே எனத் தெரியவருகின்றது.

எது எவ்வாறாக இருந்தபோதும் பிரதேச செயலாளர் மற்றும் அவரது நெருங்கிய உத்தியோகத்தர்களின் முறையற்ற காணி அபகரிப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் மேலதிக அரசாங்க அதிபரினால்(காணி) அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் குறித்த அறிக்கையும் அமைச்சரின் தலையீட்டை அடுத்து அரச அதிபரால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த காணி மோசடி தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் பலமாக பிரயோகிக்கப்பட்டுவருகையில் மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையும் விதந்துரைகளும் இதோ!




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com