Thursday, September 19, 2019

ரெஜினோல்ட் குரே மொட்டுவுக்குள். கோட்டாவுக்கான வட மாகாண ஒருங்கிணைப்பாளராம்..

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று பொது ஸ்ரீ லங்கா ஜன பெரமுன கட்சியின் உத்தியோகப்பூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஸ்ரீ லங்கா ​பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவிடம் இவர் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை வெற்றியடைச் செய்வதற்காக, வட மாகாணத்தின் சகல ஒருங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com