Tuesday, September 17, 2019

கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வை

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை மற்றும் அரசர்கேணி ஆகிய பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன் டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால் பளை அரசர் கேணி பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்;பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டுட்டுள்ளனர்.

இன்று (17) காலை; 11.30 மணிக்கு குறித்த பகுதிக்கு சென்ற குழுவினர் குறித்த பகுதிகளின் நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், கண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் குறித்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு காணிகள் அரச காணிகள் என்பன உள்ளடங்கலாக வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 28 வரையான பணியாளர்களை கொண்டு நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com