Thursday, September 26, 2019

ரயில்வே தொழிற்சங்கம் நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில்

ரயில்வே தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பள முரண்பாடு பிரச்சினைகளை முன்வைத்து இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டது.

நள்ளிரவு முதல் தபால் ரயில்களும் இயக்கப்படாது என சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அறிவித்தார். இப் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ரயில் சாரதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆதரவளித்துள்ளனர்.

அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com