ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் மட்டுமே இருக்க முடியும்... - கோத்தபாய
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc8fzOaC4Wg4mUeBo9ZwMzmJkuolBsPkeBpmEBe_G6B33-xEG7-WSEk9iaJHptk4k36lKmROMjx-2kOd82o-agFMNelMfWSbMWFbtCNyBO3nJ_DwPbxReErdVtKQ5HWTIQW0g9K4l1vYI/s200/68823020_1079405475590524_369819868419063808_n.jpg)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது சம்மேளனத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது சம்மேளனம் அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருவரினதும் பூரண ஒத்துழைப்புடனேயே இந்நிகழ்வு இடம்டபெற்றது.
'சட்டம் எனும் எண்ணக்கரு ஒரு நாகரிக சமுதாயத்தின் அத்திவாரமாகும். பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக கட்டாயம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது நாங்கள் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்ற உண்மையாகும்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பொதுமக்களின் தேவைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மேலும் இடமளிக்கக் கூடாது.
அதற்குப் பதிலாக அந்நிறுவனங்களுக்கு உண்மையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொடுத்து, அதனை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை சக்திமிக்கவர்களாக ஆக்குவதற்கு சட்டத்தரணிகளின் ஆலோசனைகளையும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்....
ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் மட்டுமே செயற்பட முடியும்...
சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்...
குடிமகன் எப்போதும் சட்டத்தினால் மரியாதைப்படுத்தப்பட வேண்டும். என்றாலும், குடிமகன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் பயந்தால் அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் ஆட்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment