Sunday, September 22, 2019

அரசியல் சூடுபிடித்துள்ளவேளை இந்தியாவிலிருந்து வர எத்தனிக்கின்றான் அங்கொட லொக்கா!

அரசியல் சூடுபிடித்துள்ளதனால் பாதாளக் குழுவை முடக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதனால், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாதாளக் குழுத் தலைவன் அங்கொட லொக்கா இலங்கைக்கு வந்து, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு எத்தனிப்பதாக பாதாளத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமயங் உள்ளிட்ட ஐவரைக் கொலை செய்ததன் பின்னர் 'அங்கொட லொக்க' மற்றும் 'லடியா' இருவரையும் கிம்புலாஎல குணாவின் குழுவினர் இந்தியாவுக்கு வரவழைத்தனர். இந்தியாவில் 'அங்கட லாெக்கா'வுக்கு சகல வசதிகளும் மதுஷின் ஆலோசனையின் பேரில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து டுபாய்க்குச் செல்வதற்கு 'அங்கொட லொக்க' முயற்சி செய்தபோதும் அதற்கு மதுஷ் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இருவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

மதுஷின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து மதுஷைப் பாதுகாப்பதற்காக தலைவரைத் தேடி இந்தியாவுக்கு வருகைதந்தபோது, தலைவர் மதுஷின் மனைவியை அருகில் வைத்துக்கொண்டதனால் மதுஷ் மற்றும் தலைவனுக்கிடையே கொலைக்கான முயற்சிகளும் நடைபெற்றிருக்கின்றன என புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியவந்துள்ளது. மதுஷ் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால் அங்கு சென்று மதுஷை கொன்றொழிப்பதற்கான சூழ்ச்சிகளையும் தலைவன் மேற்கொண்டுள்ளான் எனபுலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியவந்துள்ளது. மதுஷின் உறவுவைத்துள்ள பாதாளக் குழுவாகிய கிம்புலாஎல குணாவின் குழுவினர் சேர்ந்திருப்பது பயங்கரமானதே என்பதை அறிந்து, இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்துள்ளதாக பாதாளக் குழு ஒற்றர்கள் மூலம் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com