Monday, September 30, 2019

பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக சஜித் அறிவிக்க வேண்டுமாம்.

சஜித் பிறேமதாஸ தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நியமிப்பேன் என தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல்பிரச்சாரங்களின்போது நாட்டின் பாதுபாப்புக்கு முக்கிய இடம்வழங்குவது தொடர்பாக பேசப்படும் என்றும் பாதுகாப்பு தொடர்பாக சஜித் பிறேமதாஸவிற்கு அறிவு அனுபவம் கிடையாது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்றும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பு விடயங்களில் பூரண அறிவைக்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என மக்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களின்போது உறுதிமொழி அளிக்கப்படவேண்டும் என சஜித்திடம் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழு சந்தித்தபோதே இந்த முன்மொழிவு வைக்கப்பட்டபோதும், கட்சியினுள் சிலர் அதற்கு எதிர்ப்பு காட்டியதாகவும் அறியமுடிகின்றது.

சஜித் பிறேமதாஸவை வேட்பாளராக நியமிக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியிருந்தவர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவராவார். இருந்தபோதும் அண்மையில் சரத் பொன்சேகாவை தொலைபேசியில் அழைத்த சஜித் பிறேமதாஸ சரத் பொன்சேகாவின் உதவி தேர்தல் பிரச்சாரங்களின்போது அத்தியாவசியமானது எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com