Saturday, September 7, 2019

யாழ் மாநகர மண்டபத்திற்கு அடிக் கல் நாட்டும் நிகழ்வுக்கு 2.7 மில்லியன் செலவு

2.7 மில்லியன் உபரசரனை மற்றும் நிகழ்வுக்கான செலவுகள் மேற்கொள்ளப்பட்டு 2350 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாட்டி வைத்தார்.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாநகர மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா யாழ்.மாநகர முதல்வர் இ . ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வாறு அமையவுள்ள குறித்த மண்டபத்திற்காக 2019 ஆம் ஆண்டில் 750 மில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த . சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com